எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்)
வண்டாடும் கங்கை மலர்த தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (வண்டாடும்)
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பன்னீர் மழை சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மையழகை பாடுங்களே (பன்னீர் மழை)
தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களே (ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி)
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
குருவயூர்தன்னில் அவன் தவழ்கிழ்ன்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கிள்றவன் (குருவாயூர்)
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (அந்த ஸ்ரீரங்கத்தில்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்
அன்று பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் (பாஞ்சாலி)
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான் (நாம் படிப்பதற்கு)
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
in english:

